Site icon Tamil News

பிரான்ஸில் இரவு விடுதியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் இரவு விடுதியில் மது அருந்திக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை பரிஸ் நகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

18 ஆம் வட்டாரத்தின் Pigalle பகுதியில் உள்ள இரவு விடுதியில் வைத்து பெண் ஒருவரை நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு கூடியிருந்த பலர் குறித்த நபரை தடுத்து நிறுத்தி, காவல்துறையினரை அழைத்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து, 42 வயதுடைய குறித்த நபரைக் கைது செய்தனர். அவர் Suresnes (Hauts-de-Seine) நகரில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version