அமெரிக்காவில் கட்டப்பட்ட பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தம் கோயில், உலகின் இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் 183 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலய வளாகத்தில் 10,000 சிலைகள் உள்ளதாகவும், 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் அண்மையில் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தம் ஆலயம் எதிர்வரும் 18ஆம் திகதி பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.