Site icon Tamil News

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் – விஜயதாஷ ராஜபக்ஷ

நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். உலகில் முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகளில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சின் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வது தொடர்பாக நேற்று இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அத்துடன் நீதி அமைச்சு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இன்னும் ஒருவருடம் வரை செல்லும்.

நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாமல்போனால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.

நீதிஅமைச்சின் வெற்றி தோலியிலேயே ஏனைய அமைச்சுக்களின் வெற்றி தோலி தீர்மானிக்கப்படுகிறது அதனால் நாடோன்றில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாவிட்டால் மக்கள் வீதிக்கிறங்குவார்கள்.

இனங்களுக்கிடையில் நம்பிக்கை உறுதிப்படுத்தாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இனங்களிக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்தாமல் நாட்டொன்றை முன்னேற்ற முடியாது என்றார்.

Exit mobile version