Site icon Tamil News

இலங்கை மின்கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை தனது ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இவ்வாறான பிரேரணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், ஆனால் இன்று (08.01) வரை அவ்வாறான பிரேரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version