Tamil News

பெரும் தொகை தங்கம் கொள்ளை – இவர்களை பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா?

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் குழுவொன்றை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கல்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று 37 கிலோ தங்கத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றம் தொடர்பில் கல்பிட்டி நீதவான் நீதிமன்றம் ஐந்து சந்தேக நபர்களை பெயரிட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

071 859 1763 அல்லது 071 859 4916

Exit mobile version