Site icon Tamil News

மலை உச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை எடுக்கச் சென்றவரும் பலி!

கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை எடுக்கச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர், காப்புக்காட்டுக்குள்ளேயே திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா மூன்றாம் சிங்கப் படையணியில் கடமையாற்றி வந்த அனுராதபுரத்தில் வசிக்கும் 36 வயதுடைய கோப்ரல் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்வதற்காக பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் காப்புக்காட்டுக்கு சென்றுள்ளனர்.

அவர்களுக்குப் பின் வந்த இருவர், ராணுவ அதிகாரி ஒருவர் காப்புக்காட்டில் கிடப்பதாகக் கூறியதையடுத்து, மற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கார்போரலை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக லிந்துலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Exit mobile version