Site icon Tamil News

சிங்கப்பூர் சென்ற விமானத்தில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

சிங்கப்பூரின் Scoot விமானத்தில் மூன்று பயணிகளிடம் இருந்து திருடிய நபருக்கு 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த 52 வயது சாங் சியூசியாங் திருடிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மேலும் இரு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. டிசம்பர் மாதம் வியட்நாமில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த TR305 விமானத்தில் அந்தத் திருட்டுச் சம்பவம் நடந்தது.

சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கியபோது பணத்தைக் காணவில்லை என்று சில பயணிகள் புகார் கூறினர்.

விமானப் பயணத்தின்போது சாங் மற்றவர்களின் பைகளில் இருந்து பணத்தை எடுப்பதைச் சிலர் அவதானித்துள்ளனர். விமானம் தரையிறங்கிய பிறகு விமானி காவல்துறையின் உதவியை நாடினார்.

சாங் கைது செய்யப்பட்டார். 3 பயணிகளிடம் திருடப்பட்ட பணம் மீட்கப்பட்டது. சாங் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை ‘சற்று அதிகம்தான் என்று நீதிமன்றத்தில் கூறினார்.

Exit mobile version