Tamil News

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தெரிவித்தே குறித்த நபர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவன் அயல் வீட்டுப் பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் சுய விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்துள்ளனர்.

 

இதனையடுத்து   பெண் வீட்டார் மேற்படி இளைஞனின் வீட்டுக்கு சென்று தாக்குதலை மேற்கொண்டு சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட இளைஞனின் வீட்டார் இது குறித்து முறைப்பாடு அளித்துள்ளனர்.

முறைப்பாட்டுக்கு அமைய பெண்ணின் தந்தை மற்றும் பெரிய தகப்பனாரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். பின்னர் குறித்த இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் ஐந்து சந்தேகநபர்களை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த 5 சந்தேகநபர்களையும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ள நிலையில், தவறு செய்யாத தாம் ஏன் முன்னிலையாக வேண்டும்? தனது மகளை அவதூறாக பேசிய வீட்டுக்காரர் மீது பொலிஸார் நடவடிக்கை எனக் கூறி பெண்ணின் பெரிய தகப்பனார்  தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பரபரப்பான நிலையேற்பட்டது.

Exit mobile version