Site icon Tamil News

இங்கிலாந்தில் முடிவுக்கு வந்தது செவிலியர்களின் போராட்டம்!

இங்கிலாந்தில் செவிலியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்த போராட்டங்கள் நிறைவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் (RCN) கடந்த மாதம் அரசாங்கம் வழங்கிய சம்பள சலுகையை நிராகரித்த பின்னர், வெளிநடப்புகளை செய்வதாக அறிவித்திருந்தனர்.

இருப்பினும், தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த ஆணையைப் புதுப்பிக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வாக்கெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதில் 50 வீதத்தை அவர்கள் பெற வேண்டும்.

இந்நிலையில்,  100,000 க்கும் அதிகமானோர் வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தபோது, RCN இன் 300,000 உறுப்பினர்களில் 122,000 பேர் மட்டுமே வாக்குச் சீட்டைச் சமர்ப்பித்திருந்தனர். இன்படி 43 வீதமான வாக்குகளே பதிவாகியுள்ளது.

இதனால் செவிலியர்கள் முன்னெடுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version