Site icon Tamil News

இங்கிலாந்தில் பனிப்பொழிவு தொடர்பில் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி!

இங்கிலாந்தில் இந்த மாதம் பனிப்பொழிவிற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில உயரமான பகுதிகளில் மாத்திரம் அதிகளவிலான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரையில் பனி மூட்டம் குறைவாக இருக்கும் மற்றும் போக்குவரத்து மற்றும் பிற சேவைகளுக்கு எந்த இடையூறும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்காட்டிஷ் நகரங்கள் மற்றும் லண்டனில் பனிப்பொழிவிற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version