Site icon Tamil News

பிரான்ஸில் வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய பிரதமர் உறுதி!

பிரான்ஸில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், விவசாயிகள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அந்நாட்டின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.

“வேலைவாய்ப்பை அதிகரிப்பதே எனது முன்னுரிமை” என்று அவர் பிரான்சின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய சட்டமன்றத்தில் கூறினார்.

செயலற்ற தன்மையை விட  வேலைக்கு அதிக ஊதியம்” கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக அட்டல் உறுதியளித்தார்.

“நாடு முழுவதும் பல துறைகள் பணியமர்த்த விரும்பும் நேரத்தில் வேலையின்மை விகிதம் 7% ஆக உள்ளது என்பது முட்டாள்தனம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கேப்ரியல் அட்டலின் கருத்துக்களுக்கு சபையில் வரவேற்ப்பு காணப்பட்டாலும், எதிர்கட்சிகளிடம் இருந்து அதிக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Exit mobile version