Tamil News

மறைந்த நடிகர் மயில்சாமியின் ஆசை! நடிகர் ரஜினிகாந்த் செய்தது என்ன

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் மயில்சாமி.

அவர் சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவர் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் தற்போது செய்து முடித்து இருக்கிறார்.

அதன்படி மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது ரஜினிகாந்த் ஒரு விடயத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

”நான் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசை அதை சீக்கிரமாக நிறைவேற்றுவேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒரு வழியாக மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றி விட்டார் ரஜினிகாந்த் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Exit mobile version