ஆப்கானிஸ்தான் தலைநகரில் மினிவேன் வெடித்தமை தொடர்பில் இஸ்லாமிய அரசு குழு பொறுப்பேற்றுள்ளது.
ஷியைட் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு வெடிக்கச் செய்ததாகவும், சுமார் 13 பேர் , காயமடைந்ததாகவும் தீவிரவாத அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துஷ்டி பராச்சி சுற்றுவட்டாரத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
காபூலின் தஷ்டி பார்ச்சி பகுதி ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசு குழுவின் துணை அமைப்பால் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மசூதிகள் மீது இந்த குழு பெரும் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.