Site icon Tamil News

விளையாட்டாக ஆசனவாய் ஊடாக காற்று நிரப்பிய சம்பவம்!! குடல் வெடித்து உயிரிழந்த இளைஞன்

இளைஞர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ளார்.

மாபிம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பழுது நீக்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி பிற்பகல் குறித்த நிறுவன ஊழியர்கள் இருவர் விளையாட்டாக குறித்த நபரின் ஆசனவாயில் காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியுள்ளனர்

இதில் குடல் வெடித்து படுகாயமடைந்த அவர ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Exit mobile version