செங்கடலில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான டேங்கர் கப்பலில் ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகள் இரண்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த ஏவுகணைகள் தண்ணீரில் விழுந்தமையால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தாக்குதல் நடந்த நேரம் குறித்த கூடுதல் விவரங்களை ஹவுத்திகள் தெரிவிக்கவில்லை.
சமீபகாலமாக ஹுதிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் செங்கடல் பகுதியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.