Site icon Tamil News

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இணக்கம்!

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25வது அமர்வின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக் காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதார தடை நீடிக்கப்பட்டது.

குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன்இ பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லுமாறு இலங்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version