Site icon Tamil News

இலங்கை இளைஞர், யுவதிகளை வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய கும்பல்

இலங்கை இளைஞர், யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, 47 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெருந்தொகை பணத்தை பெற்ற இந்த நபரினால் ஏமாற்றப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணையில் ஈடுபட்டபோதே இந்த அலுவலர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்த யுவதியை வழிநடத்திய பிரதான குற்றவாளியாக இந்த பல்கலைக்கழக ஊழியர் காணப்படுகிறார்.

அந்தப் பெண் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்ற 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தொகையை தற்போது கைதாகியுள்ள சந்தேக நபரின் வங்கிக்கணக்கில் செலுத்தியமையும் பொலிஸ் விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version