Site icon Tamil News

இலங்கை – கல்பிட்டி பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீன்பிடி கப்பல் மாயம்!

கல்பிட்டியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என அக்கப்பலின் உரிமையாளர் கல்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தக் கப்பலில் ஈச்சங்கடுவ பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று மீனவர்கள் பயணித்துள்ளனர்.

இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version