Site icon Tamil News

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தத்தின் இறுதி நாள்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாள் இன்றாகும்.

அதன்படி, ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அசல் ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம், ஆனால் காசா பகுதியில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் போர்நிறுத்த காலத்திற்குப் பிறகு முழு பலத்துடன் மீண்டும் தொடங்கும் என்று கூறினார்.

நேற்று பதினான்கு இஸ்ரேலியர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டவர்கள் அடங்கிய குழுவை ஹமாஸ் விடுவித்தது. அவர்களில் நான்கு வயது சிறுமியும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று ஹமாஸ் பணயக் கைதிகளின் மற்றொரு குழுவை விடுவித்துள்ளது, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளையும் விடுத்துள்ளது.

ஹமாஸ் இதுவரை 58 பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. 117 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

Exit mobile version