Site icon Tamil News

இலங்கையில் மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி

 

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடகம்மெத்த பகுதியில் மனைவி கணவனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் உடகம்மெத்த, கொமகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, மனைவி இரும்புக் கம்பியால் கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version