Site icon Tamil News

40000 அடி உயரத்தில் பறந்த விமானத்திற்கு நேர்ந்தக் கதி : அவசரமாக தரையிறக்கம்!

ஹீத்ரோவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நோக்கி புறப்பட போயிங் 787-9 என்ற விமானத்தின் முன் கண்ணாடி திடீரென உடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் 40,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விமானம் திசைதிருப்பப்பட்டு அவசரமாக பிரித்தானியாவில் தரையிறக்கப்பட்டது.

இதனால் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்பதுடன், இடையூறுக்காக பயணிகளிடம் விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

அத்துடன் ஒருநாள் கழித்து பயணிக்கவுள்ளதால் பயணிகளுக்கான தங்குமிடங்களுக்கும் விமான நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

Exit mobile version