Site icon Tamil News

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் லொரி மோதியதில் கட்டுமான ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

Tanah Merah Coast வீதி கட்டுமானத் தளத்தில் பின்னோக்கிச் சென்ற கனரக லொரி அவர் மீது மோதியதாக மனிதவள அமைச்சு கூறியது.

சீனாவைச் சேர்ந்த 35 வயது ஆடவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டுள்ளது. 36 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தை விசாரிப்பதாக மனிதவள அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் தளத்தில் வாகனப் போக்குவரத்தை நிர்வகிக்க நல்ல திட்டம் இருப்பது அவசியம் என்றும் பின்னோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு வழிகாட்ட ஒருவர் பொறுப்பில் இருக்கவேண்டும் என நினைவூட்டியது.

Exit mobile version