Site icon Tamil News

இலங்கையில் வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி

கம்பஹா, பெண்டியமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் கை கால்களை கட்டி பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்று சமய சடங்குகளை மேற்கொண்டு வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மதியம் வீட்டிற்குள் புகுந்த சில குழு அல்லது நபர் இந்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version