Site icon Tamil News

பிரான்ஸில் 11 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி – தீவிர விசாரணையில் பொலிஸார்

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Nîmes மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள Pissevin எனும் பகுதியில் வைத்து இரவு 11.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

வாகனத்திற்குள் இருந்து குறித்த 11 வயதுடைய சிறுவனின் சடலத்தையும், அவனது உறவினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளதாகவும், வாகனத்தை இயக்க முற்பட்டவேளையில் சிறுவன் மீது துப்பாக்கிக்குண்டு பாயந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Exit mobile version