Site icon Tamil News

இலங்கையில் மரத்தில் பதுங்கியிருந்த கைதிக்கு நேர்ந்த கதி

கொள்ளை குற்றத்திற்காக மாத்தறை சிறைச்சாலையில் 04 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி, மற்றுமொரு வழக்கில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது தப்பி சென்றுள்ளார்.

பின்னர் தலைமறைவாக இருந்த போது ஐந்து மணிநேர நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள மரத்தில் பதுங்கியிருந்த கைதி சிறைச்சாலை அதிகாரிகளால் பிடிபட்டார்.

இந்த கைதிக்கு எதிரான வழக்கு முடிவடைந்ததையடுத்து, மதியம் 12.15 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரை கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version