Site icon Tamil News

தலவாக்கலையில் நச்சு வாயுவை சுவாசித்த 09 பேருக்கு நேர்ந்தக் கதி!

தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (19.10) மாலை தலவாக்கலை நகரிலுள்ள ஜவுளி மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் நச்சு புகையை சுவாசித்து நோய்வாய்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடையவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, ​​கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை, நிறுவன ஊழியர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நோய்வாய்ப்பட்டவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version