Site icon Tamil News

சூப்பர் டைபூன் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சூப்பர் டைபூன் என்று அழைக்கப்படும் ஒரு சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த சூறாவளியானது சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு சீனாவின் ஹைனானில் மணிக்கு 145mph (234kph) வேகத்தில் காற்று வீசியதுடன், மழை நிலவியது.

வியட்நாமின் அரசாங்கம் நான்கு பேர் இறந்ததாகவும், 78 பேர் காயமடைந்ததாகவும் பலர் காணாமல்போனதாகவும் அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த புயல் காரணமாக மின் தடை ஏற்பட்டதாக மூன்று நாடுகளும் அறிவித்துள்ளன.

Exit mobile version