Site icon Tamil News

இலங்கையில் பொலிஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்திய சடலம்

கெக்கிராவ ஒலுகரந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றின் கொங்கிறீட் கூரையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

சிறிது நேரம் கட்டிடம் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கட்டிடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வேளையில் இருந்த நிலவரப்படி, குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கெக்கிராவ ஒலுகரந்த பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய திருமணமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் சில நாட்களாக அவர் தனது வீட்டில் இருந்து காணாமல் போனது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version