Site icon Tamil News

இந்தோனேசியாவில் தங்கம் தேடி கொண்டிருந்த மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்து : நிலத்தில் புதையுண்ட பலர் மாயம்!

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக தங்க சுரங்கத்தில் பணிப்புரிந்த சிலர் நிலச்சரவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தொலைதூர சோலோக் மாவட்டத்தில் கிராமவாசிகள் தங்கத் துகள்களை தோண்டிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறைந்தது 25 பேர் இன்னும் புதைக்கப்பட்டுள்ளனர் என்றும், மீட்புப் படையினரால் காயங்களுடன் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version