Site icon Tamil News

சிறுவனுக்கு எமனாக மாறிய தொட்டில்!

நாவலப்பிட்டியில் –  மொன்றிகிறிஸ்ரோ பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில்  இறுகிய நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புடவையொன்றில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் 9 வயது சிறுவன் ஒருவர் விளையாடி கொண்டிருந்தபோது தொட்டில் கயிறு சிறுவனின் கழுத்து பகுதியில் இறுதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version