Site icon Tamil News

ஜேர்மனியில் கத்திகுத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஜேர்மனியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இப்ராஹிம் ஏ என மட்டுமே அடையாளம் காணப்பட்ட 34 வயதான பாலஸ்தீனியர் மீது இட்ஸேஹோவில் உள்ள மாநில நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனவரி 25, 2023 அன்று வடக்கு நகரமான ப்ரோக்ஸ்டெட்டில் இரு இளைஞர்களை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

பிரதிவாதி காசா பகுதியில் வளர்ந்து 2014 இல் ஜெர்மனிக்கு  வருகை தந்துள்ளார்.

வழக்குறைஞர்கள் அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாக மன்றில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் ஜேர்மனியின் சட்டவிதிகளுக்கு அமைய குற்றவாளி ஏனையவர்களைபோல் 15 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் விடுதலை செய்யப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version