மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயமாக மறுசீரமைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று (26.09) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரச நிறுவனங்களின் செலவின அறிக்கை முறைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.