Site icon Tamil News

அரசாங்கத்தை கவிழ்க்க பின்னணியில் உள்ள சதித்திட்டம்! அம்பலப்படுத்திய நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு சக்திகள் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ ,

”அரசாங்கத்துக்குள் இருந்துதான் சதி உருவானது. சர்வதேச சக்திகளும், பயங்கரவாத அமைப்புகளும் அரசாங்கத்தை கவிழ்க்க செயற்பட்டன. அதன் பலனாக நல்லாட்சி அரசாங்கம் உருவானது. ஆனால் மஹிந்த ராஜபக்ச ஒப்படைத்த அரசாங்கத்தை அல்ல கோட்டாபாய ராஜபக்ச பொறுப்பேற்றார்.” என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தொகுதி மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தலாவ நகரில் நடைபெற்றது

Exit mobile version