களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கைகள் நாளை (18) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இரவு இடைவேளை அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து களனி பல்கலைக்கழகம் கடந்த 5 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டமை .குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மத்தியில் இதுவரை நிலவிய அமைதியான சூழலை இந்த சம்பவம் சீர்குலைத்துள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் துணைவேந்தர் தெரிவித்தார்.
டிசம்பர் 05 அன்று, சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.