கிழக்கு லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 05வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிளாஸ்டோவுக்கு அருகில் உள்ள உயரமான கட்டடத்தில் இருந்து அவர் கீழே விழுந்து பலியானதாக பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் 15 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.