Site icon Tamil News

இலங்கையில் பிற்பகல் வேளையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 2 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களுக்கு. மீ. 75 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version