Tamil News

ஜூன் 25ஆம் திகதி அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு!

ஜூலை 25ஆம் திகதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25ஆம் திகதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்பட்டன. இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் எமர்ஜென்சியை குறிப்பிடுவார்கள். இந்த நிலையில் ஜூலை 25ஆம் திகதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரத்தை எதிர்கொண்டு, ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடிய கோடிக்கணக்கான மக்களை கவுரவிப்பதே மோடி அரசின் நோக்கம். இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும் என பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பா.ஜனதா அரசியலமைப்பை அழிக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version