Site icon Tamil News

ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஓடிய சாரதி கைது

ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஓடிய சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய பேருந்து சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பு – எம்பிலிப்பிட்டிய மார்கத்தில் ஓடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

புவக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள களனிவெளி ரயில் பாதையில் இன்று (02) சாரதி தனது பேருந்தை ஓட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

அதன்படி, குறித்த  பேருந்து மற்றும் சந்தேகத்திற்குரிய பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version