Site icon Tamil News

பிரான்ஸ் தெருவில் கண்ணீர்விட்டு அழுத பிரித்தானிய பெண் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பிரான்ஸில் நடந்த இசை விழாவில் பார்ட்டியில் கலந்து கொண்ட பிரித்தானிய பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாரிஸில் உள்ள தெருவில் சுற்றுலாப் பயணி தனது உள்ளாடைகளைப் பிடித்துக் கொண்டு அழுவதைக் கண்டுப்பிடித்ததாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Fête de la Musique அல்லது Make Music Day இசை நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பெண் கொச்சி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் பல ஆண்கள் தன்னை ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து தனது தொலைபேசியைத் திருடிச் சென்றதாகவும் காவல்துறையிடம் தெரிவித்ததாக Le Figaro தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருப்பினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

Exit mobile version