Site icon Tamil News

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்

பிரான்ஸில் 16 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு பாலியல் பலாத்காரம் மற்றும் பலாத்கார முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயதுடைய சிறுவன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2023 ஜூன் மாதம் வரை Seine-Saint-Denis நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த பலாத்கார சம்பவம் கடந்த இடம்பெற்றுள்ளது.

Aubervilliers, La Courneuve, Dugny, Drancy, Le Pré Saint-Gervais, Romainville மற்றும் Rosny-sous-Bois பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளதுடன், ஏழு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

20 தொடக்கம் 41 வயதுவரையுள்ள பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு கண்காணிப்பு கமராக்களில் பதிவான ஆதாரங்களை கொண்டும் மரபணு சோதனைகளில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை அடிப்படையாக கொண்டும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version