Site icon Tamil News

ஜோர்தானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லைகள் மூடல்!

ஜோர்தானுடனான அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் மூடியுள்ளது

ஜோர்தானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்

ஞாயிற்றுக்கிழமை காலை ஜோர்தானின் அண்டை நகரமான அல்-கரமாவிலிருந்து ஒரு டிரக்கில் துப்பாக்கிதாரி வந்து எல்லைக் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மூன்று இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜோர்தான் எல்லையில் நடந்த முதல் தாக்குதல் இது என்றும் ஜோர்டான் தரப்பிலிருந்து மூடப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டதாகவும் ஜோர்தான் கூறுகிறது.

ஜோர்தானுக்கும் மேற்குக் கரைக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான சரக்குகளுடன் சரக்கு வாகனங்கள் ஜோர்தானில் இருந்து வருவதாகவும், இதன் காரணமாக அது கடுமையாக பாதிக்கப்படும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version