Site icon Tamil News

கம்பளையில் கொலைசெய்யப்பட்ட 22 வயதான யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

கம்பளையில் காணாமல்போன  22 வயதாக யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

பாத்திமா முனவ்வரா என்ற யுவதி காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,   குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அத்துடன்  இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அளித்த  வாக்குமூலத்தில் குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் அடையாளம் காட்டிய இடத்தில் கம்பளை நீதவான் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version