Tamil News

ஸ்பெயின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மொரோக்கோ அகதிகள் நால்வரின் சடலம்!

ஸ்பெயின் கடற்கரையில் மொரோக்கோ நாட்டை சேர்ந்த 4 அகதிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது.

மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து படகுகள் மூலம் வெளியேறும் அகதிகள் மேற்கு மத்தியதரைக் கடல் வழியாக, ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவு வாயில்களில் ஒன்றாக ஸ்பெயின் நாட்டில் நுழைகின்றனர்.

இதன்படி, மொரோக்கோவில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ளனர்.இதில், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Five Moroccan migrants drown off Western Sahara: NGO | Arab News

இதேபோல், பயணத்தில் தப்பிய புலம்பெயர்ந்தவர்களில் 4 பேர் மயக்க நிலையில் காணப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்பெயின் பொலிஸார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Exit mobile version