Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்பு

ஆஸ்திரேலியாவின் – சிட்னியின் புளூ மவுண்டன்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய நேரப்படி இன்று மதியம் 12.40 மணியளவில் இந்த வீட்டில் ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் இந்த வீட்டிற்கு வந்துள்ளனர்.

9 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

42 வயதான பெண் ஒருவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு சிறுவர்களின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர், இதுவரை சந்தேக நபர் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Exit mobile version