Site icon Tamil News

இஸ்ரேல் அதிபரிடம் பெல்ஜிய பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

காஸாவில் மீண்டும் போர் தொடங்கியதைத் தொடர்ந்து இஸ்ரேல் அதிபருடன் பேசியதாகவும், இனி பொதுமக்களைக் கொல்ல வேண்டாம்’ என இஸ்ரேல் அதிபரிடம் கூறியதாக பெல்ஜிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடந்த COP28 UN காலநிலை உச்சி மாநாட்டில், பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் டி குரூ செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“மீண்டும் வன்முறை ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. கூடிய விரைவில் மேலும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். மனிதாபிமான அணுகல் நிரந்தர மனிதாபிமான அணுகலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று டி குரூ கூறினார்.

Exit mobile version