Site icon Tamil News

2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பால்டிமோர் பாலம்

சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பலொன்று மோதி சேதமடைந்த அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் குறித்த கப்பலானது பாலத்தின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் அந்த பாலம் உடனடியாக மூடப்பட்டது.

அதனை புனரமைக்கும் பணிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்ததையடுத்து அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன.

இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version