Site icon Tamil News

இந்திய நாடாளுமன்றத்தில் 141 உறுப்பினர்களின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தின் பாதுகாப்பை மீறியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவர்களின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தில் கலந்துகொண்ட 78 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேற்று இடைநிறுத்தப்பட்டன.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 49 பேர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version