Tamil News

அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளே நாடு இந்த நிலைமைக்கு செல்வதற்கான காரணம் : வியாழேந்திரன்

காலம்காலமாக இந்த நாட்டினை ஆட்சிசெய்த அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளே இன்று இந்த நாடு இந்த நிலைமைக்கு செல்வதற்கான காரணம் என வர்த்தக,கூட்டுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கலும் தேசியத்தில் சாதணை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு மற்றும் கூட்டுறவாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதன்போது ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயற்படும் வைத்தியசாலை மற்றும் பெற்றோல் நிரப்பு நிலையம்,சுப்பர்மார்க்கட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றும் ஊழியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் ஏறாவூர் பாடசாலையில் கல்வி கற்று தொழில்நுட்ப துறையில் தேசிய சாதனை படைத்த மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளிலும் உதவியவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தினை வெற்றிப்பாதைக்கு கொண்டுசென்ற தலைவரும் கௌரவிக்கப்பட்டார்.

இதேபோன்று நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டவர்களும் ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் வைத்தியசாலையின் கேட்போர் கூட்டத்தில் ஏறாவூர் கூட்டுறவுச்சங்க தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக,கூட்டுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலானா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

 

Exit mobile version