Tamil News

13 வயதில் நடந்த எனக்கு நேர்ந்த அந்த கசப்பான அனுவம் … மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!

13 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி நடிகை யாஷிகா ஆனந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

பஞ்சாபி பொண்ணான யாஷிகா ஆனந்த் மொடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘லெஜெண்ட்’, ‘சில நொடிகளில்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் பார்ட்டி முடித்துத் திரும்பியவரின் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் இவரது நெருங்கிய தோழி மரணமடைந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு பலத்த அடிபட்டது. இந்த விபத்தில் இருந்து முழுவதுமாக மீண்டு வந்திருப்பவர் தற்போது மீண்டும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

Yashika Aanand on losing her best friend in road accident: 'I'll forever  feel guilty to be alive' - Hindustan Times

இவரது கைவசம் தற்போது, ‘இவன்தான் உத்தமன்’, ‘பாம்பாட்டம்’ உள்ளிட்டப் பல படங்கள் உள்ளன. இந்த நிலையில், ஊடகம் ஒன்றிற்குக் கொடுத்த சமீபத்திய பேட்டி ஒன்றில் யாஷிகா 13 வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். “நடிகர் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தேன். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. அப்போது, ஒருவன் என்னைத் தவறான இடத்தில் தொட்டான். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

நான் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. உடனே, அவனை நான் எட்டி உதைத்துவிட்டேன். 13 வயதில் என் தைரியத்தை நினைத்து நான் பாராட்டுகிறேன். நான் மட்டுமல்ல, பெண்களுக்கு எப்போதுமே தைரியம்தான் முக்கியம்” எனப் பேசியுள்ளார் யாஷிகா

Exit mobile version