Site icon Tamil News

சுவிஸ் நகரமொன்றில் பயங்கரம்.. பலர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

வடக்கு சுவிட்சர்லாந்தின் ஜோஃபிங்கன் நகரின் தெருக்களில் நேற்று புதன்கிழமை(15) கத்தியுடன் வந்த ஒரு நபர் பலரைக் காயப்படுத்தியதாக என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அல்லது தாக்குதல் நடத்தியவர் குறித்த எந்த விவரங்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சூரிச்சுக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் (38 மைல்) தொலைவில் உள்ள அறோ மண்டலத்தில் 12,000 பேர் வசிக்கும் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு வழிப்போக்கர் வருவரையோ அந்த நபர் முதலில் தாக்கியுள்ளார்.

பின்னர் தாக்குதல்தாரி ஒரு கட்டிடத்திற்குள் சென்று மறைந்துகொண்டுள்ளார்.

இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version